பிரான்ஸ் பாரிஸ் நகரில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில்....
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை 6.8 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, மேலும் 1,15,000 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தடுப்பூசி போட்டதற்கான அல்லது தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சிறப்பு ஹெல்த் பாஸ் உட்பட கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரான்ஸ் பொதுமக்கள் பொது இடங்களில் நுழைவதற்கு ஹெல்த் பாஸ் அல்லது தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவு கட்டாயமாக்கப்பட்டது.



