யாழில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் இடைவழியில் மரணம்
#Jaffna
#Death
Prathees
3 years ago

யாழ்ப்பாணத்தில் உடல் சுகவீனம் காரணமாக இன்று நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார்.
மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கடந்த இரண்டு தினங்கள் மூச்சு வடுவதற்கு சிரமப்பட்ட நிலையில்இ இன்று நோயாளர் காவு வண்டி மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் குறித்த பெண் இடைவழியில் உயிரிழந்து விட்டதால் சடலம் யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



