லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#Corona Virus
Keerthi
3 years ago
லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் மூன்று இலட்சத்து 339பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும் லித்துவேனியாவில் இதுவரை நான்காயிரத்து 579பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 807பேர் பாதிக்கப்பட்டதோடு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14ஆயிரத்து 301பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 100பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 81ஆயிரத்து 729பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!