பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38,154பேர் பாதிப்பு- 178பேர் உயிரிழப்பு!
#Covid 19
Keerthi
3 years ago

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 154பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 68இலட்சத்து 62ஆயிரத்து 904பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 920பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 96ஆயிரத்து 757பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 30பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 55இலட்சத்து 33ஆயிரத்து 227பேர் பூரண குணமடைந்துள்ளனர்.



