குறைமாத குழந்தைகளில் தாயின் குரலானது வலியைக் குறைக்கிறது.
Mugunthan Mugunthan
3 years ago

புதிய ஆய்வின் படி தாயின் குரல் ஒலியானது குறைமாத குழந்தைப் பிரசவத்தில் குழந்தையின் வலியை குறைப்பாதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறைமாத குழந்தைகள் பிறந்தவுடன் தாயிலிருந்து பிரித்து தீவர சிகிச்சைப்பிரிவில் வைப்பார்கள். பல கிழமைகள் தாயிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும்.
ஜெனிவாவைச் சேர்நத பல்கலைக்குழுவொன்று இத்தாலிய பரினி வைத்தியசாலை ஆதரவுடன் இதனை அவதானித்த போது, தாயின் குரல் ஒலி பிரசவத்தின் போது குழந்தையின் ஒட்சிடோசன் எனும் ஓமோனை அதிகரிக்கச்செய்தது.
ஒட்சிடோசன் ஓமோனானது தொடுகை அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடையது. இது சிறந்த வலி நிவாரணத்திற்கு பங்களிக்க முடியும்.
இந்த பரிசோதனை பிரசவத்தின் போது பெற்றோர் அருகில் இருப்பதை முக்கியப்படுத்துகிறது.



