நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கிப் பிறத்தல் என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறுகிறார்.

தமிழ் மொழியின் தலைசிறந்த பெண்பாற் புலவர் ஒளவையார் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கூறும் உண்மை ஆகும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளவற்ற ஆற்றல்கள் பொதிந்து உள்ளன‌. அதை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

அற்புதமான பிறப்பு மனிதப் பிறப்புதான். அதில் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியும் சென்றுள்ளனர்.

மனித வாழ்க்கைக்கும், நவகிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று விஞ்ஞானமும், மெய்ஞானமும் நமக்குக் கூறுகிறது.

விஞ்ஞானம் நிரூபிக்கும்; மெய்ஞானம் நம்பிக்கை தரும். நவக்கிரகங்கள் ஒன்பது பெயர்களை உடையவை. அவர்களுக்குரிய குணம், நிறம், செயல்பாடுகள் பற்றி பல ஜோதிட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு, கேது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

திறைமறைக்காடு என்னும் திருத்தலத்திலிருந்து சைவ சமயத்தின் பெருமைகளைப் பறைசாற்றுவதற்காக திருஞானசம்பந்தர் மதுரைக்கு புறப்படுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் மதுரையம்பதியை ஆண்ட கூன்பாண்டியன் என்ற மன்னன் சைவத்தின் சிறப்புகள் தெரியாமல், சமணர்களோடு இணைந்து சைவசமயத்துக்கு தீங்கு விளைவித்ததாக வரலாறு கூறுகிறது.

அப்பொழுது கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியார் வேண்டுகோளுக்கு இணங்கி, திருஞானசம்பந்தர் மதுரை வந்ததாக சமயச்சொற்பொழிவாளர்கள் கூறுகிறார்கள்.

அவ்வாறு திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டை விட்டுக் கிளம்பும் போது, நாளும் கோளும் சரி இல்லை; இப்பொழுது மதுரைப் பயணம் வேண்டாம்; கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் என்று திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் தடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4