இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா?

நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.
டெல்டா வைரஸ் திரிபு தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தினால் மேற்கொண்ட பரிசோதனை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதற்கமைய கொழும்பு நகரில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளதாக தெரியவந்தது.
அத்துடன் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் டெல்டா வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவிடயம் தொடர்பாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்,
வைரஸ் தொற்று பரவும் வேகத்தினை அவதானிக்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டார்.
எனவே, அதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக பரிசோதனை குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



