சுவிற்சலாந்து புஸ்டர் டோஸ்களுக்கு 2022ம் 2023ம் ஆண்டுகளுக்காக கட்டளை!
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்து பைசர் நிறுவனத்தினிடம் இருந்து 7மிலியன் கொவிட் தடுப்புசிகளை 2022ம் 2023ம் ஆண்டுக்களுக்கு புஸ்டர் டோஸாக பயன்படுத்த கட்டளை அனுப்பியுள்ளது.
அத்துடன் 8.6மிலியன் மக்களுக்கு ஏற்கனவே 6மிலியன் பைசர் தடுப்புசிக்கும் 13.5மிலியன் மொடர்னா தடுப்புசிக்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதிர்ச்சியுட்டும் ஏற்றத்தாழ்வை இந்த கொரோனா தடுப்புசி சம்பந்தமாக அறிவித்துள்ளது. அதாவது பணக்கார நாடுகள் மூன்றாவது டோஸிற்கு தயாராகும் வேளையில் இன்னும் வறிய நாடுகள் தமது முதலாவது டோஸையே பெற்றுக்கொள்ளமை ஆகும்.



