600 வருடங்களுக்குப் பின் சுவிஸில் கடிகாரப்பெண்மணி நியமனம்!
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் 600 வருடங்களுக்குப்பிறகு முதல் தடவையாக தேவாலயத்திற்கு கடிகாரப் பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லௌசான் கத்தோலிக்க தேவாலய கடிகார கோபுரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிக்கு இரவில் இவர் சத்தமிடுவார்.
இவ்வாறு ஒரு ஆணுக்கு பதில் பெண் நியமிக்கப்பட்டது இத்தேவாலய தொடர் சேவையை புர்த்தி செய்வது மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் ஒரு பெண் நியமிக்கபட்டது சுவிற்சலாந்து லௌசான் கத்தோலிக்க தேவலாலயத்திலாகும்.
இந்த பெண்மணி பெயர் கசன்ரா பெர்டோஸ் ஆகும். 1405 லிருந்து சேவையாற்றிவரும் இத்தேவாலயத்தில், இவர் தனது முதல் இவ்வேலையை ஆகஸ்ட் 16லிருந்து செய்து வருகிறார். இந்த வேலை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனக்கு இப்படி ஒரு கடிகாரப்பெண்மணியாக வரவேண்டும், என்ற ஆசை என்னுள்ளேயே இருந்து என்று இவர் மகிழ்வுடன் கூறியுள்ளார.



