சுவிற்சலாந்துடன் தொடர்புடைய 100 பேர் காபுலில் இருந்து வந்தனர்.
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சாலந்து தனது சுவிஸ் விமானச்சேவை மூலம் 100 பேரை இதுவரை , தலிபான்கள் ஆப்கானை ஆக்கிரமித்ததில் இருந்து நாட்டுக்கு மீள அழைத்து வந்துள்ளனர்.
இதனை சுவிஸ் வெளிநாட்டு அமைச்சு திங்கட்கிழமை அறிவித்தது. 300 இருக்கைககள் கொண்ட சுவிஸ் விமானம் சூரிச்சிலிருந்து புறப்பட்டு ஊஸ்பெக் தலைநகரான டஷ்கென்ட்டிலிருந்து இவர்களை அழைத்து வந்தது.
இந்த விமானத்தில் கொவிட் தொற்று உபரணங்கள் மற்றும் வைத்தியர்கள், சுவிஸ் மனிதாபிமான உதவிப்பிரிவு மற்றும் பாதுகாப்பிற்கு பெடரல் உத்தியோக பொலிஸ் ஆகியோர் சென்றருந்தனர்.



