தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத “எப்சிலன்” வைரஸ் பாகிஸ்தானில்
Yuga
3 years ago

அதி வீரியம் கொண்ட “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-லாகூரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே இந்த புதிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய கொவிட் வைரஸ் திரிபுகளை தடுப்பூசிகளின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஆனால் தடுப்பூசிகளால் “எப்சிலன்” வைரஸ் திரிபை கட்டுப்படுத்த முடியாது என நிபுணர்கள் சுட்டிகாட்டுவதோடு, இது முதன்முதலாக அமெரிக்காவில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



