கற்று தருகிறார் வியாசர்

கற்று தருகிறார் வியாசர்

* கடவுளை சரண் அடைவதே கல்வியின் பயன்.

* எந்த சூழலிலும் அடக்கமாக இருங்கள்.

* தவம், ஜபத்தால் அதிக பலன் கிடைக்கும்.

* முதலில் கடவுளுக்கு உணவை படையுங்கள். பிறகு நீங்கள் உண்ணுங்கள்.

* கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது.

* தர்மம் என்னும் படகில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை கடக்கலாம்.

* வேதம் வகுத்த முறைப்படி கட்டுப்பாடுடன் வாழுங்கள்.

* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார்.

* பயன் தரும் விஷயத்தை பேசுங்கள்.

* வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம்.

* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் மழை பெய்வது நிற்கும்.

* பேராசை கொண்டவனுக்கு அறிவு வேலை செய்யாது.

* கோபத்தை குறைத்தால் துன்பம் வராது.

* ஒருவரின் பிறவிக்குணம் ஒருபோதும் மாறாது.