கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு
Nila
3 years ago

இலங்கையில் நேற்று (25.07.2021) கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 6 ஆண்களும், 6 பெண்களும்,
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 24 ஆண்களும், 12 பெண்களுமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,147 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



