ரிஷாட்டின் வீட்டில் சிறுமிக்கு நடந்தது என்ன? தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

Nila
3 years ago
ரிஷாட்டின் வீட்டில் சிறுமிக்கு நடந்தது என்ன? தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், தனது மகளை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக, உயிரிழந்த ஹிஷாலினியின் தாய் ஆர்.ரஞ்ஜனி கூறியுள்ளார். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அங்குள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதன்போது, தனது மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து, ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்து பேசுவதாக, இளைஞன் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தனது குழந்தையை அடிக்க வேண்டாம் என தான் ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிய முடியாதென தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் பெற்ற கடனை, மீள செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக சென்றார் என அவரது தாயார் தெரிவித்தார்.

எனது மகளிற்கு நெருப்பென்றால் பயம் அவர் தனக்குதானே தீமூட்டியிருக்க மாட்டார் என உயிரிழந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!