கொலைக் குற்றவாளிக்கு பதவி வழங்கிய இலங்கை ஜனாதிபதி
Nila
3 years ago

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசியல் நியமனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.




