மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா?
Nila
4 years ago
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நித்திரையின்றி இருப்பார்களாயின் அது முதலாவது கொரோனா அறிகுறியாக கண்டறியப்படும் என உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர்கள், வழமையான செயற்பாடுகளில் இருந்து விலகி வேறு சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவர்கள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.