AI வளர்ச்சி குறித்து சாம் ஆல்ட்மேனின் அதிர்ச்சி எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சியால் மனிதகுலத்திற்கு இரண்டு முக்கிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவதாக, AI மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் நிலை உருவாகக்கூடும் எனவும், இரண்டாவதாக, அதிநவீன AI மீதான அதிகாரம் ஒரு சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் மட்டுமே குவியும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் அதேவேளையில், அதன் பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என சாம் ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், AI மீதான முழுமையான கட்டுப்பாடு ஒரே நபர், நிறுவனம் அல்லது நாட்டிடம் குவிந்தால், அது எதிர்காலத்தில் ஆபத்தான சர்வாதிகார சூழலுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, AI வளர்ச்சி மனிதகுலத்திற்கு பயனுள்ளதாக அமைய அதன் பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான உரிய கட்டுப்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே