பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக உயர்வு
மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் மாகாணப் பகுதிக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 13 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை (PCG) தெரிவித்துள்ளது.
'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) படகிலிருந்து மேலும் 41 பேரின் எரிந்த நிலையில் உள்ள உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35லிருந்து 76ஆக உயர்ந்துள்ளதாகவும் கடலோரக் காவல் படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள் 'பிஆர்பி கேப் என்கானோ' (BRP Cape Engano) கப்பல் மூலம் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
படகுப் பயணிகளின் பட்டியலில் 134 பேர் இருந்த நிலையில், 13 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை; அதேவேளையில், பட்டியலில் பெயர்கள் இருந்த இருவர் தாங்கள் படகில் ஏறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மீட்பு மற்றும் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே