சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதி பேருந்து விபத்து - ஐவர் உயிரிழப்பு
கிழக்கு சுவிட்சர்லாந்தின் தொலைதூர ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
45 டச்சு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சுஷ் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமானப் பகுதியில் கவிழ்ந்து விழுந்த மறுநாள், காவல்துறை இந்த உயிரிழப்புகளை அறிவித்தது.
கிரிசன்ஸ் மாகாண காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையிலும், ஏழு பேர் மிதமான காயங்களுடனும், மீதமுள்ள 30 பேர் சிறு காயங்களுடனும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் 13 ஆம்புலன்ஸ் குழுவினர் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுவிஸ் அதிபர் கை பார்மெலின், சமூக ஊடகங்களில், தான் "மிகுந்த அதிர்ச்சியும் மன வருத்தமும்" அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது "மனமார்ந்த இரங்கலை" தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே