கிளிநொச்சியில் சோகம் - காரின் பின் டயரில் சிக்கி 01 வயது குழந்தை பலி

#SriLanka #Death #Accident #Kilinochchi
Thamilini
1 hour ago
கிளிநொச்சியில் சோகம் - காரின் பின் டயரில் சிக்கி 01 வயது குழந்தை பலி

கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவனகர் பகுதியில், தாத்தா ஓட்டி வந்த வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்.

வீட்டின் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை தாத்தா பின்னோக்கி எடுத்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரின் பின்புறம் நின்றிருந்த சிறுமியை கவனிக்காமல் வாகனத்தை செலுத்தியதால், வாகனத்தின் சக்கரங்கள்  சிறுமியின் உடலில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. 

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4