நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் 22ஆவது திருத்தம்!

#SriLanka #Age #Lanka4 #retirement #Amendment #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் 22ஆவது திருத்தம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் உள்ளது.

எனினும், அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாள் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நாள் ஆகிய இரண்டில் முதலில் வரும் நாளில் ஓய்வுபெற வேண்டும் என்ற ஏற்பாடும் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் பிரதான நோக்கம் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4