இலங்கையில் பரபரப்பு: முன்னாள் ஐ.ஜி.பி சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து தீவிர விசாரணைக்கு இரு குழுக்கள் நியமனம்!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னே மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP வூட்லர், Newswire ஊடகத்திடம் தெரிவித்ததாவது, ஆரம்பகட்ட விசாரணைகளின்படி முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்னே, மலபே – தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் அவர் உடனடியாக முல்லேரியாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், இது தற்கொலை என சந்தேகிக்கப்படும் மரணம் என கருதப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை மற்றும் நீதிவான் விசாரணைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.அத்துடன், சம்பவம் தொடர்பாக சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.
முன்னாள் IGP-யின் மரணத்தைச் சூழ்ந்துள்ள அனைத்து சூழ்நிலைகளையும் முழுமையாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் குழுக்களும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே