சீனாவில் பாரிய நிலச்சரிவு - மண்ணுள் புதையுண்ட மக்கள்!! மீட்பு பணிகள் தீவிரம்!
#SriLanka
#China
#Land_Slide
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் (Chongqing) இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏராளமானவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவை தொடர்ந்து 60 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரம் இதுவரை ஒன்பது பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே