108 மில்லியன் டாலர் முதலீட்டில் சாதனை படைக்கும் ஹம்பாந்தோட்டா துறைமுகம்!
துறைமுகத்தின் கொள்ளளவை 2 மில்லியன் TEU ஆக உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 108 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டின் கீழ், அதிநவீன கொள்கலன் கையாளும் உபகரணங்கள் (Container Handling Equipment) கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இதில் உலகத்தரம் வாய்ந்த Ship-to-Shore (STS) கிரேன்கள் மற்றும் Rail-Mounted Gantry (RMG) கிரேன்கள் உள்ளடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை கப்பல்களிலிருந்து கொள்கலன்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் கையாள உதவும்.
ஏப்ரல் மாதத்தில் முறியடிக்கப்பட்ட இந்தச் சாதனைக்கு முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு முறை அடுத்தடுத்து அதிக கொள்கலன்களைக் கையாண்ட சாதனைகளை HIP நிகழ்த்தியிருந்தது.
ஆனால், MSC மேரி லெஸ்லி கப்பல் வருகையின் போது 13,260 TEU-கள் கையாளப்பட்டதானது, சர்வதேச அளவில் பெரிய அளவிலான (Mega Containers) கப்பல்களைத் தடையின்றி இயக்கும் வல்லமை இந்தத் துறைமுகத்திற்கு இருப்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது.
சர்வதேச கிழக்கு-மேற்கு கடல் வணிகப் பாதைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், பெரிய கப்பல் நிறுவனங்கள் தங்களின் கொள்கலன்களை மாற்றி அனுப்புவதற்கு (Transshipment) ஹம்பாந்தோட்டாவை முதன்மைத் தேர்வாகக் கருதத் தொடங்கியுள்ளன.
உலகின் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனமான 'மடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி' (MSC) உடன் இணைந்து HIP செயல்படுவது, துறைமுகத்தின் வணிக நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளது.
இந்த முதலீடுகள் மற்றும் தொடர் சாதனைகள் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு இணையாக ஹம்பாந்தோட்டாவும் ஒரு முன்னணி சர்வதேச கொள்கலன் பரிமாற்ற மையமாக (Hub) உருவெடுத்து வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே