மக்களுக்காக ஒன்றினையும் 6 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்
சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் 6 கூட்டாக இணைந்து பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கை ஒன்றை திங்கட்கிழமை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளன.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் தங்களுக்குள் எட்டப்பட்டுள்ள இந்த கூட்டு உடன்படிக்கை குறித்த மேலதிக விபரங்களை இந்த நிகழ்ச்சியின் போது வெளியிடவுள்ளதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு ஒன்றிணைந்துள்ளன.
தமிழ் பேசும் மக்களின் பொதுவான மற்றும் சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.
வட, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இதில் கைகோர்த்துள்ளன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்கள் விரிவாக முன்வைக்கப்படவுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே