காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் 12வது வாரமாக மக்கள் போராட்டம்!
வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் தங்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அன்று முதல் இன்று வரை அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமகா இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நீடிக்கும் ஏமாற்றம்: யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் அப்பகுதிகளிலிருந்து வெளியேறவில்லை.
இதனால் தங்களின் வாழ்வாதார நிலங்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் போராட்டம்: தங்களின் 650 ஏக்கர் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் ஆதரவு: இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா மற்றும் பெருமளவிலான காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே