நாடளாவிய ரீதியில் 19 சாலை விபத்துகளில் 24 பேர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
மே மாதம் 19 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தம் 24 பேர் உயிரிழந்ததாக, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனதீரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு நாட்களில் 29 பெரிய விபத்துக்கள், 96 சிறிய விபத்துக்கள் மற்றும் 19 சொத்து சேதம் பற்றிய விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
வெசாக் பண்டிகைக் காலத்தில் உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )