இன்றைய வானிலை - இடியுடன் கூடிய மழை பெய்யும்!
#SriLanka
#weather
#report
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் உள்ள சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே )