எரிபொருள் விலை உயர்வு!! நள்ளிரவு முதல் நடைமுறைக்கு!
#SriLanka
#prices
#Fuel
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வித எரிபொருளுக்குமான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லீடு்டர் சூப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் அதிகரித்து 478 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு 24 ரூபாய் அதிகரித்து 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் 95 ஆக்டேன் விலை லிட்டருக்கு 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாயால் அதிகரித்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.