அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு : அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
#SriLanka
#Jaffna
#Court Order
#ADDA
#Archuna
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தொடர்பட்ட வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளார்.
(வீடியோ இங்கே )