அட்டமஸ்தான தேரரின் சேவையே முக்கியமானது: சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஞானசார தேரர் வாதம்!
நாட்டில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மனிதர்கள் வாழும் இந்தச் சமூக அமைப்பில் இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுவது சகஜமான ஒன்று எனத் தெரிவித்தார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளை மட்டுமே மையமாக வைத்து ஒருவரது ஒட்டுமொத்த வாழ்வையும் மதிப்பிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அனுராதபுரம் போன்ற புனித பூமியினதும், ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தினதும் உன்னத நிலையைப் பாதுகாப்பதற்காக அட்டமஸ்தான தேரர் நீண்டகாலமாகத் தனது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை வழங்கியுள்ளார்
என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்திய ஞானசார தேரர், அவரது ஆன்மீக மற்றும் சமூகப் பங்களிப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
(வீடியோ இங்கே )