சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை பரிந்துரைக்கும் குடும்பத் திட்டமிடல் சங்கம்!
சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த மற்றும் அது சார்ந்த ஏனைய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.
முன்மாதிரியாக விளங்கும் குடும்பத் திட்டமிடல் சங்கம் இலங்கையில் உள்ள நிறுவனங்களிலேயே தங்களது பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய நிறுவனம் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் தான். கடந்த ஆண்டே (2025 இல்) இந்த நடைமுறையை அவர்கள் தங்களது நிறுவனத்தில் உத்தியோகபூர்வமாக்கியுள்ளனர்.
அங்கு தங்களுக்குக் கிடைத்த வெற்றிகரமான அனுபவத்தின் அடிப்படையிலேயே, இதனை ஏன் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் நீடிக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த தேசிய அளவிலான கோரிக்கையை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
தற்போதைய சூழலும் இதன் முக்கியத்துவமும் உலகளவில் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான வரிகளை நீக்குதல் (Tax-free policy) மற்றும் விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இலங்கையிலும் தற்போது மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள் மீதான வரிகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வரும் ஒரு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த சரியான தருணத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மாதவிடாய் என்பது வெறும் பெண்களின் தனிப்பட்ட ஆரோக்கியப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு (Social Responsibility) என்பதை அனைத்து நிறுவனங்களும் உணர்ந்து, பெண்களுக்கான வேலைத்தள நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இந்த முன்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
(வீடியோ இங்கே )