பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு!

#SriLanka #Festival #prisoner #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு!

ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட விசேட வாய்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில்  சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில்,  மே 28 மற்றும் மே 30 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இத்தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவை ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமான அளவில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4