கையில் துப்பாக்கி இருந்தும் சுட தைரியம் இல்லாத அர்ச்சுனா இந்தியாவில் இருக்கும் சீமானை எப்படி சுடுவார்?
அர்ச்சுனா என்றாலே இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நாடுகள், ஈழ தமிழர்கள், இந்திய தமிழர்கள் மற்றும் இந்திய ஊடகங்களில் பிரபல்யமாக பேசப்படும் ஒரு பிரமுகராக மாறியுள்ளார்.
இவருக்கு எதிராக அனைத்து ஊடகங்களிலும் சர்ச்சைகள், ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அந்த வகையில், கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அர்ச்சுனா, கையில் துப்பாக்கி இருந்தால் சீமானை சுட்டிருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
ஒரு மாதங்களுக்கு முன்பு அவருடைய சொந்த காணிக்குள்ளே ஒரு சிலர் நுழைந்து அவரோடு முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு எதிராக கைத்துப்பாக்கியை எடுத்து சுடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர் எவ்வித துப்பாக்கி பிரயோகங்களும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், குறித்த பெண் போராளி எந்தவித பயமும் இல்லாமல் சுடு பார்க்கலாம் என்று கூறியும் சுடாத அர்ச்சுனா இந்தியாவில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் சீமானை எப்படி சுடமுடியும்.
இது தனது யூடியூப் பக்கத்தை நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் கூறப்பட்ட ஒரு விடயமாகும்.
(வீடியோ இங்கே )