ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய விபரங்கள்!! ஒரே பார்வையில்!
இலங்கை அரசியலையும் பாதுகாப்புத் துறையையும் உலுக்கும் வகையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலி முக்கிய சூத்திரதாரியாகச் செயல்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு,
பிரான்ஸ் இரகசிய வாக்குமூலம்: அசாத் மௌலானாவிடம் பிரான்சில் வைத்து பதிவு செய்யப்பட்ட இரகசிய வாக்குமூலத்தின்படி, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்கை அடைவதற்காகவே இந்த ஒட்டுமொத்த தற்கொலைத் தாக்குதல் நாடகமும் அரங்கேற்றப்பட்டது என CID நீதிமன்றத்தில் அதிரவைத்தது.
மட்டக்களப்பு சிறைச்சாலைச் சந்திப்பு: தாக்குதல் நடந்த கையோடு ராஜபக்ஷாக்கள் மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானை நேரில் சந்தித்ததாகவும், கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற ஒரே வாரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பொதுப் பணம்: ஜஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் உள்ளிட்ட தீவிரவாத உறுப்பினர்களைப் பிணையில் எடுக்க சுரேஷ் சாலியின் வேண்டுகோளின்படி, இராணுவப் புலனாய்வுத் துறை மூலம் ரூ. 250,000 பொது மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டதாக அம்பலமாகியுள்ளது.
கூலிப்படை கொலைகள்: பிள்ளையான் குழுவினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து லசந்த விக்ரமசிங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைச் செய்த கூலிப்படையாகச் செயல்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் சாடியுள்ளது.
அடுத்த தீர்ப்பு எப்போது?
சுரேஷ் சாலி தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இது தொடர்பான முக்கிய தீர்ப்பை வரும் ஜூலை 1 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுவரை சுரேஷ் சாலி தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )