பருவமழைக்குப் பின் பரவும் ஆக்கிரமிப்பு களை: கிளிநொச்சியில் விழிப்புணர்வு நடவடிக்கை!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Awareness
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
கிளிநொச்சி மாவட்டத்தில் பருவமழையைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு களையான பாத்தீனியம் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் நேற்றையதினம் (19.05.2026) கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் தொண்டமாநகர் பகுதியில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக A9 வீதியில் சிரமதானம் மூலம் பாத்தீனியத்தை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாத்தீனிய அழிப்பு நடவடிக்கையில் வி.சோதிலட்சுமி
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதீபன்
(கனகாம்பிகைக்குள விவசாயபோதனாசிரியர்) ஷிவனியா (அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே