பதவி விலக தீர்மானம் - மேற்கு மாகாண ஆளுநரின் திடீர் அறிவிப்பு!
மேற்கு மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூஃப், தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் என்ற தனது பொறுப்புகள், அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் என்ற தனது பங்கு, மற்றும் தனது குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவதில் அதிகரித்து வரும் சவாலைக் கருத்தில் கொண்டு பதவி விலகும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
. "பொதுப் பதவியில் பணியாற்றியதும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு என்னால் இயன்ற வழிகளில் பங்களித்ததும் ஒரு பாக்கியமாகும்," என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், சுமூகமான மற்றும் ஒழுங்கான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, பொருத்தமான வாரிசு அடையாளம் காணப்படும் வரை மேற்கு மாகாண ஆளுநராகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றுதெளிவுபடுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )