சொந்தப் பணத்திலிருந்து 60,000 ரூபாய் இழப்பீடு!

#SriLanka #Police #CourtOrder #money #ImportantNews #L4
Lakhi
4 months ago
சொந்தப் பணத்திலிருந்து 60,000 ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு காவல்துறை நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவமொன்றின் போது, சட்டத்தரணி ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லருக்கு (ASP F.U. Wootler) உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது நீர்கொழும்பு காவல் நிலையத்தின் தலைமையகப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய வூட்லர், சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவின் தொழில்முறை கடமைகளில் சட்டவிரோதமாகத் தலையிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு ஏ.எஸ்.பி. வூட்லர் தனது சொந்தப் பணத்திலிருந்து 60,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அதே காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மதுஷங்க டயஸ் 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இரு அதிகாரிகளும் தலா 10,000 ரூபாய் வழக்குச் செலவைச் செலுத்த வேண்டும் எனவும் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4