மாற்றுத் தீர்வு எட்டப்படும் வரும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது!

#SriLanka #council #system #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
மாற்றுத் தீர்வு எட்டப்படும் வரும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது!

இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை உருவாக்க வேண்டும் என்பதை எமது தேர்தல் அறிக்கையிலேயே நாம் உறுதியளித்திருந்தோம். 

மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லை என்பது எமது கருத்து. எவ்வாறாயினும், ஒரு சிறந்த மாற்றுத் தீர்வைத் தேடும் வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும்.

முறையான மாற்றுத் தீர்வொன்றை எட்டாமல் அவற்றை நாம் அகற்றப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டச் சிக்கல் காரணமாகவே மாகாண சபைகளை தற்போது இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது.

இந்த ஆண்டில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நாம் திட்டமிட்டிருந்த போதிலும், 'டித்வா' புயல் அனர்த்த காரணங்களால் அது சாத்தியப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனை எவ்வாறு நடத்துவது என்பதே தற்போதைய கேள்வி. 

தேர்தலை நடத்துவதற்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும். அத்துடன் எல்லை நிர்ணயம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 

இது குறித்து விரிவாக ஆராய்வதற்காக தற்போது ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது." - என்றார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4