ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : சந்தேகநபரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிக்க உத்தரவு‘!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்ட தங்கம், ரத்தினக் கற்கள் மற்றும் பிற சொத்துக்களை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று (25) குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அகமதுவின் வீட்டிலிருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, ஒரு வாரத்திற்குள் சந்தேகநபரின் சகோதரர் இப்லால் அகமதுவிடம் அவற்றை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
முந்தைய நீதிபதியின் உத்தரவு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மற்றொரு நீதிபதி உத்தரவிட்டிருந்தாலும், சிஐடி அந்த உத்தரவையும் பின்பற்றத் தவறிவிட்டது என்றும், அதன்படி ஒரு வாரத்திற்குள் பொருட்களை விடுவிக்க உத்தரவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்