அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்க மின்சார சபை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்க முடிவு செய்துள்ளன.
தங்களின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காமையால் மேற்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
21 மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று (25) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பி அனைத்து ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளன.
இதுவரை தங்கள் 8 கோரிக்கைகளுக்கு எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க தொழில்துறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர ஊழியர்களுக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் வேறு வழியில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்