சுரேஷ் சாலேவை 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்க முடியும் : சஜீவ மேடவத்தே தகவல்!
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் (PTA) கீழ், மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுரேஷ் சாலே இன்று (25) காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்காக 72 மணிநேரம் தடுத்து வைக்க முடியும் என துணைப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்தே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சில மணி நேரங்களுக்குள் கூடுதல் தகவல்களை வெளியிடுவது கடினம் என்றும், போலீசார் தங்கள் கடமைகளை முறையாகச் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் எதிர்கால விசாரணைகளின் போது, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையாகச் செயல்பட்டவர் பற்றிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்