கொழும்பில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் !

#SriLanka #Colombo #Dengue #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
கொழும்பில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் !

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து இந்த விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

இந்த விசேட வேலைத்திட்டத்தில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சமூக பொலிஸ் பிரிவினர் மற்றும் ஏனைய தன்னார்வக் குழுக்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபைப் எல்லைக்குள் மாத்திரம் 889 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 12,165 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புக்கு மேலதிகமாக மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் கண்ணங்கர மேலும் சுட்டிக்காட்டினார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4