இலகு ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு ஜப்பான் இறுதி ஒப்புதலை வழங்கவில்லை - விஜித ஹேரத்
கொழும்பில் முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இன்னும் இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர த் தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர், தற்போது நடைபெற்று வரும் பிற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்த பின்னரே எதிர்கால முடிவு எடுக்கப்படும் என்று JICA அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
பல்வகை போக்குவரத்து மையங்களின் கட்டுமானம் தற்போது நடைபெற்று வருவதாகவும், LRT திட்டத்தை செயல்படுத்துவது குறித்த விவாதங்கள் நடந்திருந்தாலும், JICA யிடமிருந்து இறுதி ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்