AI மாநாடு - டெல்லி செல்லும் ஜனாதிபதி!

#SriLanka #Delhi #AnuraKumaraDissanayake #NarendraModi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
AI மாநாடு - டெல்லி செல்லும் ஜனாதிபதி!

டெல்லியில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான  செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (17) இந்தியாவுக்குப் புறப்பட உள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி திசாநாயக்க இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். 

 இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி திசாநாயக்க பிப்ரவரி 19 ஆம் திகதி கூட்டத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐந்து நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடல்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக கவனம் செலுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4