இன்றைய ராசிபலன் (16.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (16.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்: 

அசுவினி: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பழைய கடன்களை அடைப்பீர். பண நெருக்கடி நீங்கும். பரணி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தடை விலகும். தொழில் போட்டியாளர் விலகுவர். கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும். வராமல் இருந்த பணம் வரும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். வருமானம் உயரும். ரோகிணி: மனக்குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்படுவீர். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். தடைபட்ட வேலைகள் முடியும்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனக்குழப்பம் ஏற்படும் திருவாதிரை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம். புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: 

புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயலில் லாபம் காண்பீர். பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 

சிம்மம்: 

மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்ட வேலையை இன்று நடத்துவீர்கள். செல்வாக்கு உயரும். பூரம்: வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமான முயற்சி வெற்றியாகும். உத்திரம் 1: வெளியில் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பெரிய மனிதர்களை சந்திப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அஸ்தம்: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிக்கு ஏற்ப பலன் உண்டு. நெருக்கடி நீங்கும். சித்திரை 1,2: புதிய பொறுப்பு தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர். 

துலாம்: 

சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை நடக்கும். சுவாதி: வேலைபளு அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். விசாகம் 1,2,3: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும். தொழில் முன்னேற்றம் அடையும். 

விருச்சிகம்: 

விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். கேட்டை: செல்வாக்கு உயரும். முடியாத வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

தனுசு: 

மூலம்: நன்மையான நாள்.வராது என்று நினைத்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்திராடம் 1: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர். 

மகரம்: 

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் பிரச்னை முடியும். மனம் தெளிவடையும். திருவோணம்: தேவையற்ற சிந்தனை வேண்டாமே. எடுக்கும் வேலை வெற்றியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். நம்பிக்கை உண்டாகும். 

கும்பம்: 

அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். சதயம்: நீங்கள் மேற்கொண்ட வேலையில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: திடீர் செலவு ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர் உதவிபுரிவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். 

மீனம்: 

பூரட்டாதி 4: லாபமான நாள். மேற்கொள்ளும் வேலையில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ரேவதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம்வரும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி விலகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!