பொது சேவை கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கால அவகாசம் கோரும் ஜனாதிபதி!

#SriLanka #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பொது சேவை கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கால அவகாசம் கோரும் ஜனாதிபதி!

பொது சேவை கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொது ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மறுஆய்வு நடைபெற்று வருவதாகவும், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மூன்றாவது சம்பள உயர்வு 2027 ஆம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் அதன் பின்னர் பிற பொது சேவை கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

“ரடம எகட” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசு ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

அத்துடன் டிட்வா பேரழிவைத் தொடர்ந்து நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை சமாளிக்க திறைசேரியிலிருந்து ரூ. 500 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!