வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான தரவு சேகரிப்பு செயல்முறை ஆரம்பம்!
வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான தரவு சேகரிப்பு செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தேர்தல் ஆணையர் நாயகம் ரசிக பீரிஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1 ஆம் திகதி தகுதித் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, பிப்ரவரி 1 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் 18 வயதை அடைந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பதை உறுதிப்படுத்திய நபர்கள் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்படுவார்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட முறையை ஆணையம் பின்பற்றும் என்றும், வீடு வீடாகச் சென்று தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
வரைவுப் பட்டியல் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்