17 வயது சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - யாழில் சம்பவம்!

#SriLanka #Jaffna #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
17 வயது சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தின் அல்லப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதில் 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் அல்லப்பிட்டி சந்திப்பு அருகே இன்று (10) காலை சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சமிக்ஞை செய்ததாகவும், இருப்பினும், குறித்த வேன் உத்தரவை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 

தொடர் உத்தரவுகளை தவிர்த்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பொலிஸார் இதில் 17 வயது இளைஞர் மீது குண்டு பாய்ந்ததாக தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடுகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4