17 வயது சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - யாழில் சம்பவம்!

#SriLanka #Jaffna #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
17 வயது சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு - யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தின் அல்லப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதில் 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் அல்லப்பிட்டி சந்திப்பு அருகே இன்று (10) காலை சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சமிக்ஞை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், வேன் உத்தரவை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸாரின் தொடர் உத்தரவுகளை தவிர்த்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடுகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!